வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடரும் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்


வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள எஸ்டேட் வழக்கறிஞர் அருண் கோவிந் என்பவரது வீட்டை சுமார் 8 யானைகள் கொண்ட காட்டு யானைக்கூட்டம் இன்று அதிகாலை 5 மணியளவில் முற்றுகையிட்டது.

 

இதில் அவரது வீட்டின் கதவை உடைத்து குட்டியானை ஒன்று உள்ளே நுழைந்ததால் மற்ற யானைகள் வீட்டின் ஜன்னல் வழியாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், கிரைண்டர் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது.



 

இதைத்தொடந்து, வீட்டில் தனியாக இருந்த வழக்கறிஞர் அருண் கோவிந் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் வனத்துரையினருக்கும் தகவல் தெரிவித்ததைத் தொடந்து, ஊர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர். 

தொடர்ந்து வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளதால் எஸ்டேட் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

மேலும், காட்டு யானை வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான தாய்முடி, நல்லமுடி, ஆனைமுடி, ஈட்டியார் போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...