பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சி : இரு மாநில எல்லைகளுக்கு சீல்!


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால் பல்வேறு கட்சியினர் கேரள எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் தமிழக-கேரள எல்லை பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் குறுக்கேதேக்குவட்டை, மஞ்சக்கண்டிஉள்ளிட்ட 6 இடங்களில் கேரளஅரசு தடுப்பணைகள் கட்டும்பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகஅரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமானபணிகள் நடைபெறுவதை தடுத்தநிறுத்த வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாகபவானி ஆற்றில் தடுப்பணைகள்கட்டும் கேரள அரசை கண்டித்தும்,கட்டுமான பணிகளை மத்திய அரசுதடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக கேரள எல்லைப்பகுதியான கோவை மாவட்டம் ஆணைக்கட்டியில்அனைத்து கட்சிகள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக, தபெதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 



இதையடுத்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பகுதிகளுக்கு சென்று, கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த அனைத்து கட்சியினர் சென்றனர். கேரள மாநிலத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால், அம்மாநில எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் கேரள மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில எல்லைகளில் தண்ணீர் பீரங்கி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் கேரள மாநிலத்திற்கு செல்பவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...