தை மாதம் முன்னிட்டு மருதமலையில் குவிந்த பக்தர்களால் வாகன ஓட்டிகள் அவதி


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோவில். முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலையில் ஆண்டுதொரும் எந்நாளும் பக்தர்கள் ஏராளமானோர் வழிபடச் சென்று வருவர்.

குறிப்பாக தை மாதத் திருநாட்களில் பக்கதர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்தே காணப்படும்.



இவ்வருடம் தை மாதத் திருநாட்கள் நடைபெற்று வருவதாலும் இன்று விடுமுறை நாள் (ஞாயிறு) என்பதாலும் ஆயிரக்கணக்கான முருகன் பக்தர்கள் மருதமலையில் குவிந்துள்ளனர்.

வாகனங்களில் மருதமலை முருகன் கோவில் செல்வோர்கள் மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் வழியிலேயே மேலே சென்று கோவிலுக்கு சென்றுவிடுவர்.

அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்த நிலையில் மருதமைலை முருகன் கோவிலின் மேற்பகுதியில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

குறிப்பாக, கார் உள்ளிட்ட வாகனமே அதிகமாக வந்துள்ளதால் மருதமலை முருகன் கோவிலின் அடிவாரத்தில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மருதலை கோவிலுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், தற்போது மேலே கோவிலுக்கு சென்றுள்ள வாகனங்கள் திரும்பி கீழே வந்தால் மட்டுமே கீழ் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள பக்தர்கள் மேல் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடியும்" என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...