கே.எம்.சி.எச்-ல் அதிநவீன ரோபோட்டிக் கருவி மூலம் பத்துவகையான அறுவை சிகிச்சை

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக ரோபோட்டிக் கருவியின் உதவியுடன் சிக்கலான இரைப்பை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிநவீன டாவின்சி ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி செய்யும் அறுவை சிகிச்சை மிகசிறு துளையிட்டு, வலி குறைவாகவும், தழும்பு இல்லாமலும், நோயாளிகள் விரைவில் குணமடையும் விதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. பெரிதாக்கப்பட்ட முப்பரிமாண காட்சியால், சிக்கலான புற்றுநோய்த் திசுக்களையும் மிகவும் துல்லியமாக பிற நற்திசுக்கள் பாதிக்காத வகையில் அகற்ற முடியும். 



54 வயது பெண்மணி உணவு உண்ண முடியாத நிலையில் மருத்துவர் கணேசனை வந்து சந்தித்தார். அவரை ஆய்வு செய்த மருத்துவர், மார்பு பகுதியில் உள்ள  உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார். அவருக்கு புற்றுநோய் கட்டியை கரைக்க கீமோ கதிர்வீச்சு சிகிச்சை தரப்பட்டது. இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. எனவே இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு டாக்டர் கணேசன் ரோபோட்டிக் கருவியின் மூலம் உணவுக் குழாய்பகுதி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் மற்றும் இரண்டு கோளவடிநீர் கட்டிகளையும் அகற்றினார். 

வழக்கமாக இந்தமுறையில் மார்பை திறந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதை தவிர்த்து, அதிநவீன ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி மார்பு பகுதியில் நான்கு சிறியதுளையிட்டு துல்லியமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டார். இது போன்றே 3 மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை இந்த ரோபோடிக் கருவியின் உதவியுடன் மிகவும் துல்லியமாக மேற்கொண்டுள்ளார். இதனால், நிரந்தரமான மலக்குடல் நீக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

டாவின்சி ரோபோட்டிக் அமைப்பை பயன்படுத்தி இவர் கே.எம்.சி.எச்-ல் இதுவரை 15 அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். ரோபோட்டிக் கருவியைபயன்படுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பத்துவகையானஅறுவை சிகிச்சை விபரங்கள்:

1) மார்பு பகுதி அறுவை சிகிச்சை

2) இரைப்பை 

3) ஹெல்லர்ஸ் எதுக்களிப்பு

4) டி2 இரைப்பை பகுதி

5) கணையத்தில் ஏற்படும் அழற்சி

6) மலக்குடல் புற்றுநோய்

7) ஆசனவாய் சிகிச்சைகள்

8) மலக்குடல் நீக்கத்தை தவிர்த்து புற்றுநோய் அறுவை சிகிச்சை

9) கருப்பைநீக்க அறுவை சிகிச்சை

10) உடல் பருமனை கட்டுப்படுத்தும் இரைப்பை அறுவை சிகிச்சை

கே.எம்.சி.எச் ரேபோட்டிக்  அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவில், டாக்டர் கணேசன் பொது அறுவை சிகிச்சை மருத்துவர், சிறுநீரகம் மற்றும் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் குப்புராஜன், மற்றும் டாக்டர் ஆனந்தன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கே.எம்.சி.எச் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், “ரோபோட்டிக் சிஸ்டத்தை பயன்படுத்தி டாக்டர் கணேசன் மேற்கொண்ட அறுவை சிகிச்சை, கோவையில் முதல் முறையானது. டாக்டர் கணேசனின் இந்த அருமையான துல்லியமான சிகிச்சை பாராட்டுக்குரியது. கேஎம்சிஎச் -ல், மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் கிடையாது என்பது, மக்களிடையே நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களில் கேஎம்சிஎச்-ல் ரோபோடிக் மருத்துவ குழுவின் உதவியால் 35 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...