கோவையில் இரயில் நிலையம் முற்றுகை- ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து, கோவையில் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமான பணிகள் நடைபெறுவதை தடுத்த நிறுத்து வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்தும், கட்டுமான பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் ம.தி.மு.க வினர் கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தடுப்புகளை மீறி இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியினால் பாசனம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பவானி மற்றும் அமராவதி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக இரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...