வால்பாறையில் அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு வழங்கி 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

வால்பாறையில் நமது இந்திய தேசத்தின் 68-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். 

இதே போல் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோமதி தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வால்பாறை நகராட்சி ஆணையர் சம்பத்குமார் வால்பாறை நகராட்சி வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். 



வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வள்ளிக்கண்ணு தேசிய கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று இந்திய தேசத்திற்கு மரியாதை செலுத்தினர். 

வால்பாறை ஸ்டேன்மோர் பிரிவு பகுதியில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் குசலவன் தேசிய கொடியேற்றி வைத்தார். 

இதில் முன்னாள் நகர தலைவர் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...