தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டாட்டம்



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 68-வது குடியரசு தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கு.இராமசாமி, தேசியக் கொடியினை ஏற்றிவைத்து குடியரசு தின விழா உரையாற்றினார்.



அப்போது அவர் தனது உரையில், நாட்டினை ஒன்றிணைத்து இந்தியாவை உலகின் மிகப்பெரிய குடியரசாக்கிய இந்தியத் தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களால் நாம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அனைவருக்கும் உணவு அளிக்கும் நிலையடைந்தோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பினை சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் உலக அளவில் பட்டியலிடப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இருப்பது நமக்கு பெருமை சேர்ப்பதாகும் குறிப்பிட்டார். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட பல்வேறு விருதுகள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் கடுமையான உழைப்பபின் வெகுமதி என நினைவு கூர்ந்தார்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்காக நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்களோடு தேசிய மாணவர் அதிகாரிகள் செல்லமுத்து மற்றும் மனோன்மணி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அலுவலர்கள், பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் ஆரம்பப் பள்ளி சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...