அவிலா மேல்நிலை பள்ளி பொன் விழா ஆண்டை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக கல்வி பயன்பாட்டிற்கான மனித வடிவிலான இயந்திரமனிதன்


1967ம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்ட அவிலா பள்ளியின் பொன் விழா வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவிலா பள்ளியின் நிர்வாகத்தினர் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் வீடு இல்லாத ஏழை பொதுமக்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கபட்டு அவர்களது மருத்துவ செலவை நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும், மாற்றுத் திறனாளிகளின் மருத்துவ செலவு மற்றும் திருமண உதவித் தொகையாக 5 லட்சமும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த 15 லட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டு பள்ளி கல்வி சேவையை கடந்து பொதுமக்களுக்கு ஏராளமான சேவைகள் செய்து வருவதாக கூறினர். 

மேலும், இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவிலேயே பள்ளியில் முதன் முறையாக மனித வடிவிலான இயந்திர மனிதன் கல்வி பயன்பாட்டிற்கு உபயோக்க உள்ளதாகவும் 28ம் தேதி அன்று பள்ளியில் இதன் செயல் முறை விளக்கம் அளிக்கபட உள்ளதாக கூறினர்.

விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி குரியன் ஜோசப், உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளி கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், கோவை மாநகர ராமநாதபுரம் பகுதி மறைமாவட்டதின் ஆயர் பால் அலபாட், ஏடிஜிபி சைலேந்திரபாபு, மாநகர ஆணையர் அமல்ராஜ் உள்ளிடோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...