மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவையில் சிபிஐஎம், விசிக கட்சியினர் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு மீதான தடையினை நிரந்தரமாக நீக்கக் கோரி கோவையில் நடைபெற்று வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரின் மீதும் கொடூரமான கொலைவெறித் தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத்தொடர்ந்து, அமைதியான முறையில் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து காந்திபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கட்சியினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மீண்டும் மாணவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...