மாணவர்களுக்கு தங்கள் மையத்துறையிலேயே வேலைவாய்ப்பு தரும் விதமாக குமரகுரு கல்லூரிக்கும் பி3 நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்


கோவையை சேர்ந்த குமரகுரு கல்லூரிக்கும் ஜெர்மன் நாட்டை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வரும் பி3 நிறுவனத்திற்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 



மாணவர்களுக்கு தங்களின் மையத் துறையிலேயே வேலைவாய்ப்பு அமைத்து தருவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். 

பி3 நிறுவனத்தின் பயிற்சி பிரிவான பி3ஏ-உம், குமரகுரு கல்லூரியும் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளது. 

இப்பயிற்சியில் தேர்ச்சிபெறுபவர்களுக்கு பி3 நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற மாணவர்களுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது.

குமரகுரு நிறுவனத்தின் தலைவர் சங்கர் வானவராயர் அவர்களுக்கும், பி3 நிறுவனத்தின் துணைத் தலைவர் நவ்தீப் கிரண் புராணிக் அவர்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கு வடிவமைப்பு, ஆராய்தல், மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு கோணங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட், இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...