வ.உ.சி அடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் களமிறங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை இன்று காவல் துறையினர் திடீரென தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் இந்த கொடூரமான தாக்குதலால் தமிழகம் முழுவதும் தற்போது போர்க்களமாக காட்சியளித்து வருகிறது.

கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த ஒருவார காலமாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்களை விரட்டும் முயற்சியில் இன்று காலை காவல்துறையினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.



இதனால், சிதறியோடிய இளைஞர்களும், மாணவர்களும் கோவையின் முக்கிய பேருந்து நிலையமான காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.









மேலும், தங்களுடைய அமைதியான போராட்டத்தை சீர்குலைத்து எங்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தும் காவல்துறையை கண்டிப்பதாக தெரிவித்த இளைஞர்கள் பேருந்துநிலையத்தில் இருந்த ஒரு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தற்போது அந்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இதனால்,காந்திபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...