'சைக்ளோத்தான்' எனும் விழிப்புணர்வு பேரணி- கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ கொடியசைத்துத் துவக்கி வைப்பு.!!

கோவை மாநகராட்சியில்‌ 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும்‌ வகையில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ திவான்பகதூர்‌ சாலையில்‌ சைக்ளோத்தான்‌ (Cyclothon)நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும்‌ வகையில்‌ சீாமிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ திவான்பகதூர்‌ சாலையில்‌ சைக்ளோத்தான்‌ (Cyclothon)நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று 03.10.2021 கொடியசைத்துத் துவக்கி வைத்து சைக்கிள்‌ பயணத்தைத் தொடங்கினார்.



கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ மோட்டார்‌ வாகனம்‌ அல்லாத போக்குவரத்தை மேம்படுத்தும்‌ வகையில்,‌ சைக்ளோத்தான்‌ (Cyclothon) சைக்கிள்‌ பயணமானது ஆர்‌.எஸ்‌.புரம்‌ டி.வி.சாலை தபால்‌ அலுவலகம்‌ அருகில்‌ தொடங்கி புரூக்‌ பீல்டு ரோடு, ரேஸ்கோர்ஸ்‌ சாலை, வாலாங்குளம்‌, செல்வ சிந்தாமணி குளம்‌, பெரியகுளம்‌ உள்ளிட்ட அனைத்து குளங்கள்‌ வழியாகச் சென்றடைந்து 22-கி.மீ தூரத்திற்குப் பயணம்‌ மேற்கொண்டு மீண்டும்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ டி.வி.சாலை வந்தடைந்தது.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளரும்‌ தனது சைக்கிள்‌ பயணத்தை மேற்கொண்டார்‌. தொடர்ந்து யோகாசனம்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.



அதனைத்‌ தொடர்ந்து, சைக்ளோத்தான்‌ நிகழ்ச்சியில்‌ பங்கேற்று சைக்கிள்‌ பயணம்‌ மேற்கொண்ட 200 நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா பாராட்டுச்‌ சான்றிதழ்களை வழங்கி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி இயக்குநர்‌ டாக்டர்‌.ராஜகுமார்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ ஹேமலதா, பிரபாகரன்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...