வேளாண்மை பல்கலை., தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.என் ஆர்த்தி, 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். கொடுமுடி பகுதியை சார்ந்த ஸ்ரீ கார்திகா பழனிச்சாமி 199.67 கட் ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கோவையை சார்ந்த எம். மோகனா 199.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.



இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கே.ராமசாமி கூறுகையில், "வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இணையதளம் மூலமாக மட்டுமே கலந்தாய்வு நடைபெறுவதால் கோவைக்கு யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை.

முதல் முறையாக இணையதள வழியாக வரும் ஜூலை 9 முதல் 13-ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அதே மாதம் 23-ம் முதல் 27 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

தொழில் கல்விக்கான கலந்தாய்வு 16-ல் நடைபெறும். அதே போல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆகஸ்டு மாதம் முதல் நாள் கல்லூரி தொடங்குகிறது. அதே மாதம் 31-ம் தேதியோடு மாணவர் சேர்க்கை முடிவடையும்.

இணையதள வழியாக நடைபெறும் கலந்தாய்வில் சிலைடிங் (Sliding) முறை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் இடங்கள் இருந்தால் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.

இந்த தரவரிசை பட்டியலில் 197 என்ற கட் ஆப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றுள்ளனர். 195.75 கட் ஆப் 200 பேர் பெற்றுள்ளனர். 195 கட் ஆப் 300 பேர் பெற்றுள்ளனர். கலந்தாய்வின் படி மாணவர்களுக்கு அரசு கல்லூரியிலேயே இடம் கிடைக்கும். மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க வேண்டாம்." என்றார்.

48,676 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 32,621 பேர் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர். அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆண்கள் 13,889 , பெண்கள் 18,732 என்பது குறிப்பிடத்தக்கது.







Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...