கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக அங்கீகரித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
800 ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணா என்பவரால் தான் லிங்காயத் மதம் உருவாக்கப்பட்டது. லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். சிவனை வழிபடும் லிங்காயத்துகள் வேதம், சாதி அமைப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். கர்நாடகா மாநிலத்தில் தான் பெரும்பாலும் லிங்காயத்துகள் கணிசமாக உள்ளனர். லிங்காயத்துக்குச் சொந்தமான வீர வைச மடங்கள் கர்நாடகா முழுவதும் வியாபித்துள்ளன. வீர சைவ மடங்கள் கர்நாடகாவில் அரசியல், சமூக பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அண்மை காலங்களில் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள புதிய மதம் லிங்காயத் தான். 12-ம் நூற்றாண்டில் வடகர்நாடகத்தில் உருவான வசனக்காரர்கள் இயக்கம் தான் லிங்காயத். வசனக்காரர்கள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அனைத்து சாதியினரும் அதில் இணைந்தனர். வர்ணாசிரமக் கோட்பாட்டை தகர்த்து எறிந்து சகோதரத்துவத்தை வசனகக்காரர்கள் நிலைநாட்டினர். கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய மதம் அறிவித்துள்ளார். லிங்காயத்துகளின் வாக்குகளைக் கவர முதல்வர் சித்தராமையா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், லிங்காயத் மதத்தை அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.
800 ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணா என்பவரால் தான் லிங்காயத் மதம் உருவாக்கப்பட்டது. லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். சிவனை வழிபடும் லிங்காயத்துகள் வேதம், சாதி அமைப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். கர்நாடகா மாநிலத்தில் தான் பெரும்பாலும் லிங்காயத்துகள் கணிசமாக உள்ளனர். லிங்காயத்துக்குச் சொந்தமான வீர வைச மடங்கள் கர்நாடகா முழுவதும் வியாபித்துள்ளன. வீர சைவ மடங்கள் கர்நாடகாவில் அரசியல், சமூக பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அண்மை காலங்களில் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள புதிய மதம் லிங்காயத் தான். 12-ம் நூற்றாண்டில் வடகர்நாடகத்தில் உருவான வசனக்காரர்கள் இயக்கம் தான் லிங்காயத். வசனக்காரர்கள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அனைத்து சாதியினரும் அதில் இணைந்தனர். வர்ணாசிரமக் கோட்பாட்டை தகர்த்து எறிந்து சகோதரத்துவத்தை வசனகக்காரர்கள் நிலைநாட்டினர். கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் புதிய மதம் அறிவித்துள்ளார். லிங்காயத்துகளின் வாக்குகளைக் கவர முதல்வர் சித்தராமையா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், லிங்காயத் மதத்தை அங்கீகரிக்குமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.