வரும் 24-ம் தேதி தொடங்கும் மிக பிரம்மாண்டமான ஆடம்பர கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பிரம்மாண்டமான முறையில் ஆடம்பர கண்காட்சி நடைபெற இருக்கிறது.

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பிரம்மாண்டமான முறையில் ஆடம்பர கண்காட்சி நடைபெற இருக்கிறது. 



தி இந்தியன் லக்சுரி எக்ஸ்போ, கோவை மக்களுக்காக உலகப்புகழ் பெற்ற ஆடம்பர பிராண்டுகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வர இருக்கிறது. இது கோவை மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தக் கண்காட்சியானது மாறிவரும் பொருளாதார சூழல்கள், சந்தையின் தேவைகள் மற்றும் ஆடம்பர சந்தை படுத்துதலை மையமாகக் கொண்டும் நடத்தப்படுகிறது. சூக் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினரால் நடத்தப்படும் இந்த நிகழ்வு ஒவ்வொரு மூச்சிலும் ஆடம்பரம் என்பதைக் கருவாக கொண்டு நடத்தப்படுகிறது.



இக்கண்காட்சியில் சுமார் 30,000 வாடிக்கையாளர்களைக் கொண்டு, மிகச்சிறந்த முறையில் தேர்தெடுக்கப்பட்டு நடத்தப்படுவதால் இந்நிகழ்வின் பங்குதாரர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. மேலும், ஆடம்பர பிராண்டுகள் மக்களை சென்று அடைவதற்கு இந்தக் கண்காட்சி ஒரு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.



இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக நிகழ்த்துவதற்கு மிகுந்த பங்களிப்பை அளித்து வருகின்ற மார்டின் குரூப் ஆப் கம்பனிஸ், விஸ்வா & தேவ்ஜி டைமண்ட்ஸ், எம்.டி., மகாவீர்ஸ், சென்னிஸ் குழுமம் மற்றும் பங்குபெறும் நிறுவனங்களான BMW, லெக்சஸ், மினி-கூப்பர், தியானி ஜுவெல்ஸ், AUDI, சம்ரிதி உனிக்லைப்ஸ்பசெஸ், DUCATI, சினிபெல்ஸ், BMW பைக்ஸ், சினிஸ்பா, JEEP, சத்யாபால், SKTM, காக்ஸ் அண்ட் கிங்க்ஸ், ரிடோல் பென்ஸ், ரித்து குமார், கிபா ஸ்டுடியோ, மைகேல் கோர்ஸ், ரேய்மன்ட், காசா கிராண்டே ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றன. 

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், ஆடை அலங்கார அணிவகுப்பு 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், நான்கு தேசிய அளவில் புகழ் வடிவமைப்பாளர்கள் பங்கு பெறுகிறார்கள். மார்ச் 25-ல் இசை நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...