தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
கோவை: தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
கோவையைச் சேர்ந்த ஞானபிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆரோக்கிய மேரி (36) என்ற மனைவியும், லூர்து ஜெரோம் (15) என்ற மகனும், மெர்லின் ஜோய்ஸ்(14) என்ற மகளும் உள்ளனர். இவர் பணிபுரியும் நிறுவனமானது இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் பதிவு செய்து அவருக்கான சந்தா தொகையினை செலுத்தி வந்தது.
இந்த நிலையில், ஞானபிரபு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியில் இருக்கும் போது திடீரென உயிர் இழந்தார். இதில் இ.எஸ்.ஐ. நிறுவனம் விசாரணை மேற்கொண்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை மற்றும் நிலுவை தொகை வழங்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அந்நிறுவனத்தின் துடியலூர் கிளை மேலாளர் கோவிந்தராஜ் ரூ.2,19,450-ஐ உயிரிழந்த ஞானபிரபுவின் குடும்பத்திற்கு வழங்கினார்.
இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,000 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையைச் சேர்ந்த ஞானபிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆரோக்கிய மேரி (36) என்ற மனைவியும், லூர்து ஜெரோம் (15) என்ற மகனும், மெர்லின் ஜோய்ஸ்(14) என்ற மகளும் உள்ளனர். இவர் பணிபுரியும் நிறுவனமானது இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் பதிவு செய்து அவருக்கான சந்தா தொகையினை செலுத்தி வந்தது.
இந்த நிலையில், ஞானபிரபு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியில் இருக்கும் போது திடீரென உயிர் இழந்தார். இதில் இ.எஸ்.ஐ. நிறுவனம் விசாரணை மேற்கொண்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை மற்றும் நிலுவை தொகை வழங்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அந்நிறுவனத்தின் துடியலூர் கிளை மேலாளர் கோவிந்தராஜ் ரூ.2,19,450-ஐ உயிரிழந்த ஞானபிரபுவின் குடும்பத்திற்கு வழங்கினார்.
இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,000 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.