பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய இ.எஸ்.ஐ.

தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவை: தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த ஞானபிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆரோக்கிய மேரி (36) என்ற மனைவியும், லூர்து ஜெரோம் (15) என்ற மகனும், மெர்லின் ஜோய்ஸ்(14) என்ற மகளும் உள்ளனர். இவர் பணிபுரியும் நிறுவனமானது இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் பதிவு செய்து அவருக்கான சந்தா தொகையினை செலுத்தி வந்தது. 

இந்த நிலையில், ஞானபிரபு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியில் இருக்கும் போது திடீரென உயிர் இழந்தார். இதில் இ.எஸ்.ஐ. நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. 

விசாரணை முடிவடைந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை மற்றும் நிலுவை தொகை வழங்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அந்நிறுவனத்தின் துடியலூர் கிளை மேலாளர் கோவிந்தராஜ் ரூ.2,19,450-ஐ உயிரிழந்த ஞானபிரபுவின் குடும்பத்திற்கு வழங்கினார்.

இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,000 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...