நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு தன்னை அர்ப்பணிக்கப் போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்
திருப்பூர் : நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு தன்னை அர்ப்பணிக்கப் போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று திருப்பூர் சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
அவமானங்களையும், ஆபத்துகளையும் தந்து கொண்டிருந்த பொது வாழ்வில் இருந்து விலகிவிட்டேன். தினகரனுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றப் போவதில்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் எனக்கு இனி வேலை இல்லை என்று துண்டை உதறி தோளில் போடுவதைப் போல் வந்து விட்டேன்.
இனி எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை. இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்க்கும் வகையில் இனி என் பணிகள் தொடரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனை தீர்க்கும் வகையில் நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். ராகுல்காந்தி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் கருத்தை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை விசயத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதும், அதே போன்று அ.தி.மு.க., தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவதும் வரவேற்கத்தக்கது.
குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமர் வீட்டின் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தினகரனின் எதிர்கால செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று திருப்பூர் சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
அவமானங்களையும், ஆபத்துகளையும் தந்து கொண்டிருந்த பொது வாழ்வில் இருந்து விலகிவிட்டேன். தினகரனுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றப் போவதில்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் எனக்கு இனி வேலை இல்லை என்று துண்டை உதறி தோளில் போடுவதைப் போல் வந்து விட்டேன்.
இனி எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை. இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்க்கும் வகையில் இனி என் பணிகள் தொடரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனை தீர்க்கும் வகையில் நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். ராகுல்காந்தி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் கருத்தை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை விசயத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதும், அதே போன்று அ.தி.மு.க., தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவதும் வரவேற்கத்தக்கது.
குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமர் வீட்டின் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தினகரனின் எதிர்கால செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.