நீலகிரியில் சிறுத்தைப் புலி தாக்கியதில் முதியவர் கவலைக்கிடம்

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம் அடர்ந்த காடுகளை கொண்ட மாவட்டமாகும். இதனால், வனவிலங்குகள் அடிக்கடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம். இப்படி வரும் வன விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களைத் தாக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.

இந்நிலையில், உதகை அருகே உள்ள தாம்பட்டி சந்திப்பில் சுந்தர் (60) என்ற முதியவரை சிறுத்தை புலி ஒன்று தாக்கியதாக அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



சம்பவத்தின் போது முதியவர் ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது அந்த முதியவர் முகம், கழுத்து பகுதியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள்,  மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...