மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவு

மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. "மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த வெயில் என்றால், மே மாதத்தில் எப்படி இருக்கும்?" என்ற பரவலான பேச்சு கோவை மக்களிடையே கேட்க முடிந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மாநகர பகுதிகளில் நேற்று மழை இல்லாத போதிலும், ஊரக பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று பெய்த மழை அளவின் படி மேட்டுப்பாளையத்தில் 36 மி.மீ மழையும், பெரியநாயக்கன்பாளையத்தில் 26 மி.மீ மழையும், வால்பாறையை அடுத்த சின்கோனா மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



இதே போல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...