ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிலுவையை சுமந்து ஊர்வலமாக சென்ற பொதுமக்கள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

நீலகிரி: ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து குருசடி திருத்தம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவையைச் சுமந்து இயேசுவின் துதிகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இயேசு கிறிஸ்து உயிர் நீத்த மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறித்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர் நீத்த போது அவர் மக்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார். இந்த மாதத்தை கிறித்துவர்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர்.

இதனையொட்டி ஆண்டுதோறும் கிறித்துவர்களின் தவக்கால பரிகார பவனி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இன்று உதகை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து தென்னகத்தின் கல்வாரி என்றழைக்கப்படும் காந்தல் குருசடி திருத்தலம் வரை ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் சிலுவை சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.



ஊர்வலத்தின் போது இயேசுவின் பாடுகளை தியானித்தபடி சென்றனர். மேலும், இந்தாண்டு இறக்கத்தின் ஆண்டாக திருத்தந்தை அறிவித்துள்ளதால் இறைவனின் இறக்கத்தை அனைவரும் உணர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பரிகார பவனியின் நோக்கமாக உள்ளதாக மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. முடிவில் அன்பின் விருந்து நடைபெற்றது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...