சுல்தான் பேட்டையில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை சுல்தான் பேட்டை பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவை சுல்தான் பேட்டை பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட சுல்தான் பேட்டையில் புதிய காவல் நிலையத் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், "இன்று தொடங்கப்பட்டுள்ள இக்காவல் நிலையத்திற்கு 2 சார் ஆய்வாளர்கள், 2 தலைமைக் காவலர்கள், 4 கிரேடு 1 காவலர்கள், 22 கிரேடு 2 காவலர்கள் என 30 காவலர்கள் பணியாற்ற உள்ளனர். பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், செலகரச்சல், இடையர்பாளையம், போகம்பட்டி, வடவள்ளி, வாரப்பட்டி, மலைப்பாளையாம், எஸ்.குமாரபாளையம், பூராண்டம்பாளையம் ஆகிய 10 ஊராட்சிகளிலுள்ள 25 குக்கிராமங்கள் இக்காவல் நிலைய எல்லைக்குள் அடங்கும். இங்கு பணியாற்றும் காவலர்கள் தீர்வு நோக்கி வரும் மக்களை இன்முகத்துடன் விசாரித்து கனிவுடன் நடத்த வேண்டும்." என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணகராஜ், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பாரி, கோவை சரக காவல் துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...