சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை சுப்பிரமணியபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கொலை தொடர்பாக முபாரக், சதாம், சுபேர் ஆகியோரையும் இவர்களுக்கு உதவியதாக அபுதாகீர் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கனி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த கொலையில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக்,சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அபுதாகீர், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். முபாரக்,சதாம் ஆகியோரது வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கோவை சுப்பிரமணியபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கொலை தொடர்பாக முபாரக், சதாம், சுபேர் ஆகியோரையும் இவர்களுக்கு உதவியதாக அபுதாகீர் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கனி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த கொலையில் அமைப்பு ரீதியான தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீர், முபாரக்,சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அபுதாகீர், சுபேர் ஆகியோரின் வீடுகளில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். முபாரக்,சதாம் ஆகியோரது வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.