ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் உடல் உறுப்பு தானம் செய்ததால், 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் உடல் உறுப்பு தானம் செய்ததால், 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கடந்த 13-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தினால் காயமடைந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதனால், லிங்கராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, இதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு இரு சிறுநீரகங்களும் தானமாக கொடுக்கப்பட்டது. சங்கரா கண் மருத்துவமனைக்கு இரண்டு கருவிழிகளும், பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டது. நுரையீரல் மற்றும் இதயம் தற்போது சென்னை க்லோபல் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு பொருத்தபட்டுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் பாரதன், மற்றும் அவரது குழு மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்தனர். இதன்மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை "அதிக மக்கள் எட்டு மணி நேரத்தில் உறுப்பு நன்கொடையாளர்கள் எனப் பதிவு செய்து" கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்த கே.என்.எஸ். லிங்கராஜுக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 13-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தினால் காயமடைந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் லிங்கராஜ் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதனால், லிங்கராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, இதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு இரு சிறுநீரகங்களும் தானமாக கொடுக்கப்பட்டது. சங்கரா கண் மருத்துவமனைக்கு இரண்டு கருவிழிகளும், பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டது. நுரையீரல் மற்றும் இதயம் தற்போது சென்னை க்லோபல் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு பொருத்தபட்டுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் பாரதன், மற்றும் அவரது குழு மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்தனர். இதன்மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை "அதிக மக்கள் எட்டு மணி நேரத்தில் உறுப்பு நன்கொடையாளர்கள் எனப் பதிவு செய்து" கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்த கே.என்.எஸ். லிங்கராஜுக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.