பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகளின் பந்தயத்தால் பலியான சிறுமி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு அரசு பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்ற போது, எதிரில் வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது மோதியதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடுத்த புதுக்காடு பகுதிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அங்கலகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது பழநியில் இருந்து வால்பாறைக்கு சென்ற அரசு பேருந்துடன் போட்டி போட்டு சென்று உள்ளது. 

ஆழியாறு ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த புதுக்காடு செல்லும் பேருந்து வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் அட்டக்கட்டியை சேர்ந்த மோனிகா (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



மேலும், வால்பாறையை சேர்ந்த கல்லூரி மாணவன் கார்த்தி (19), சிங்காரவேல் (40), வெங்கடேசன் (18), புருஷோத்தமன் (19) மற்றும் முனியாண்டி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆழியார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...