ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
ஆந்திரா, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறப்பு நிதி வழங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின்னர் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அதிரடியாக தெரிவித்தார். மேலும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திரா, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறப்பு நிதி வழங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின்னர் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அதிரடியாக தெரிவித்தார். மேலும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.