விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: விவசாயிகள் அல்லாத வியாபாரிகளை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர், இதனால், விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல், சிறுமப்பட்டு வருவதாகக் கூறி அனைத்து விவசாயிகள் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கை தனி நபருக்கு வாடகைக்கு விட்டதைக் கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர், இதனால், விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல், சிறுமப்பட்டு வருவதாகக் கூறி அனைத்து விவசாயிகள் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உழவர் சந்தையில் செயல்பட்டு வரும் காய்கறிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கை தனி நபருக்கு வாடகைக்கு விட்டதைக் கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.