இம்மாத இறுதிவரை உள்ள சனி, ஞாயிறு கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட வரிவசூல் மையங்கள் இந்த மாத இறுதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாநகாட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு (2017-18-ம்) நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்திற்கு மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களின் நலன் கருதி, மார்ச் 31 வரையுள்ள அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும். 

எனவே, இந்த வசதியினை முழுமையாகப் பயன்படுத்தி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள வரிதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...