காதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

கோவையில் கடந்த 2017-ம் ஆண்டு காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: கோவையில் கடந்த 2017-ம் ஆண்டு காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சிறுமுகை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் மகன் உதயகுமார் (23). தனது தங்கையின் தோழியான அதே பகுதியை சேர்ந்த ஆனந்தியை கடந்த 2016-ம் ஆண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் குடும்ப செலவிற்கு பணம் தராமல் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறியும், அதனை மறுத்த ஆனந்தியை கொலை செய்யும் முயற்சியும் நடந்துள்ளது. 

இதனிடையே, தனியாக வசித்து வந்த உதயக்குமார் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமுகை அருகே பேருந்தில் வைத்து மனைவி ஆனந்தியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, உதயக்குமாரை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளி உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...