அறநிலையத்துறையைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் கோவில் இடம் எனக் கூறி குடியிருப்புகளை அகற்றக் கோரிய அறநிலையத் துறையினை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கருவம்பாளையம், பாரப்பாளையம் ஆகிய இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதிகள் கோவில் இடம் எனக் கூறி, அங்குள்ளவர்களை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி அறநிலையத்துறை சார்பில் கடந்த மாதம் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுக் குடியிருப்புகளை கட்டியுள்ள தங்களை, கோவில் இடம் எனக்கூறி காலி செய்ய சொல்வதாகவும், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அறநிலையத்துறையின் முடிவை வாபஸ் பெற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்திருந்தனர். 

இந்த நிலையில், அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கருவம்பாளையம் பகுதியில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்காவிட்டால் இனி தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...