விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை தாக்கிய திருப்பூர் மக்கள்

திருப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர்: திருப்பூர் அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய நைஜீரியர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பெருமாநல்லூர், ஊத்துகுளி, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நேற்று ஊத்துகுளி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் ஒருவர் சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற நைஜீரியர்கள் முன்னே சென்றவர் மீது உரசியுள்ளார். இதில் இவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 



இதனைக் கண்ட அப்பகுதியினர் நைஜீரியர்களை சரமாரியாக தாக்கியதோடு, அவர்கள் வைத்திருந்த செல்போனையும் உடைத்தெறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துகுளி போலீசார் நைஜிரியர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு, பாதிக்கப்பட்டவரிடமும் விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

நைஜீரியர்களை பொது மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...