பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி அணிவித்த நபர்களால் பரபரப்பு

நாமக்கல்லில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி அணிவித்து, மாலை போடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி அணிவித்து, மாலை போடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல் பிரதான சாலையில் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெரு சந்திப்பில் அ.தி.மு.க சார்பில் 1984-ம் ஆண்டு பெரியார் சிலையும், 1993-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சிலையும், 1994-ம் ஆண்டு அண்ணா சிலையும் மார்பளவில் அமைக்கப்பட்டது. இச்சிலைகளை நாமக்கல் நகர அ.தி.மு.கவினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், இச்சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் கழுத்து பகுதியில் பொன்னாடை போல காவி நிற துணியை அணிவித்து மலர் மாலையும் அணிவித்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்து வந்த போலீசார் உடனடியாக காவி துணிகளை அப்புறப்படுத்தினர். 

இதையடுத்து, சிலைகளுக்கு காவி துணிகளை அணிவித்தவர்கள் யார் என்பது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...