கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் எவ்வித பணிகளும் துவக்கப்படாமல் பூட்டப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் எவ்வித பணிகளும் துவக்கப்படாமல் பூட்டப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்குவது வழக்கம். இந்த சீசனில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகை புரிவார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உலக புகழ் பெற்ற 122-வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற இருக்கும் இந்த மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் 10-வது காய்கறி கண்காட்சி தொடங்க உள்ளது. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் செய்வதில் தோட்டக்கலைத் துறை நிர்வாகம் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது.
குறிப்பாக பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள், பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் போன்றவை தொடங்காமல் உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதியில்லாமல் பூங்கா பூட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எனவே, தோட்டக்கலைத் துறை நிர்வாகம் கோத்தகிரி நேரு பூங்காவை பொலிவுபடுத்தி பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்குவது வழக்கம். இந்த சீசனில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகை புரிவார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உலக புகழ் பெற்ற 122-வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற இருக்கும் இந்த மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் 10-வது காய்கறி கண்காட்சி தொடங்க உள்ளது. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் செய்வதில் தோட்டக்கலைத் துறை நிர்வாகம் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது.
குறிப்பாக பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள், பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் போன்றவை தொடங்காமல் உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதியில்லாமல் பூங்கா பூட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எனவே, தோட்டக்கலைத் துறை நிர்வாகம் கோத்தகிரி நேரு பூங்காவை பொலிவுபடுத்தி பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.