அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தொடங்கியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தொடங்கியுள்ளார்.
மதுரை மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள திடலில் டி.டி.வி. தினகரன் நடத்தும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்ட திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரது முழு உருவ பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த திடலுக்கு காலை 10 மணி அளவில் டி.டி.வி.தினகரன் கார் மூலம் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்புக்குப் பின்னர் மேடைக்கு வந்த டி.டி.வி.தினகரன் புதிய அமைப்பின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது அமைப்புக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தொடர்ந்து, கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்திய அவர், மேடை முன்பு அமைக்கப் பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார்.
மதுரை மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள திடலில் டி.டி.வி. தினகரன் நடத்தும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்ட திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரது முழு உருவ பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த திடலுக்கு காலை 10 மணி அளவில் டி.டி.வி.தினகரன் கார் மூலம் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்புக்குப் பின்னர் மேடைக்கு வந்த டி.டி.வி.தினகரன் புதிய அமைப்பின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது அமைப்புக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தொடர்ந்து, கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்திய அவர், மேடை முன்பு அமைக்கப் பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார்.