தமிழக பட்ஜெட்: தி.மு.க. வெளிநடப்பு

தமிழக பட்ஜெட் இன்று நடைபெற்று வரும் நிலையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று நடைபெற்று வரும் நிலையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

2018-19-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று சட்டசபைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்தனர். 



10:30 மணிக்கு பட்ஜெட் உரையை துணை முதலமைச்சர் தொடங்கினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தின் படி தமிழக தலைவர்களை மோடி சந்திக்கவில்லை என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...