தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும் என்று அபுதாபி நாட்டின் கலிபா தொழில் பூங்காவின் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் எட்வின் லேமர்ஸ் கூறியுள்ளார்.
கோவை: தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும் என்று அபுதாபி நாட்டின் கலிபா தொழில் பூங்காவின் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் எட்வின் லேமர்ஸ் கூறியுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளை சார்பில் இந்திய மற்றும் ஐக்கிய நாடுகள் இடையேயான வர்த்தக மேம்பாடு கலந்துரையாடல் கூட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளையின் துணை தலைவர் வரதராஜன் பேசுகையில், "ஐக்கிய நாடுகளில் வணிகம் செய்வது எளிமையாகியுள்ளது. இது சிறந்த அடித்தளமாக உள்ளது.

தொடர்ந்து, அபுதாபி கலிபா தொழில் பூங்காவின் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் எட்வின் லேமர்ஸ் பேசுகையில், "அபுதாபி கப்பல் துறைமுகம் உலகளவில் தலை சிறந்து விளங்குகிறது. மேலும், டாடா, தாபர், ஆக்ஸிஸ், அசோக் லேலெண்ட் உள்ளிட்ட 40,000 இந்திய நிறுவனங்கள் அங்கு செயல்படுகிறது. 3 மில்லயன் இந்தியர்கள் அரபு நாடுகளில் வசிக்கின்றனர். சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அபுதாபி தலைவரும் சந்தித்தது தொழில் வர்த்தகத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கலிபா துறைமுகம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு முழுமையான துறைமுகமாக செயல்பட்டு வருகிறது. 12 மில்லியன் பொது சரக்குகள் இந்த துறைமுகத்தில் கையாளப்படுகிறது.
பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அபுதாபியில் தலை சிறந்த விமான நிலையங்களும், உலக தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. வரும் 2020-ம் ஆண்டு அபுதாபியில் இருந்து மற்ற அரபு நாடுகளுக்குச் செல்ல புகைவண்டி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும்." என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளை சார்பில் இந்திய மற்றும் ஐக்கிய நாடுகள் இடையேயான வர்த்தக மேம்பாடு கலந்துரையாடல் கூட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளையின் துணை தலைவர் வரதராஜன் பேசுகையில், "ஐக்கிய நாடுகளில் வணிகம் செய்வது எளிமையாகியுள்ளது. இது சிறந்த அடித்தளமாக உள்ளது.

தொடர்ந்து, அபுதாபி கலிபா தொழில் பூங்காவின் வர்த்தக மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் எட்வின் லேமர்ஸ் பேசுகையில், "அபுதாபி கப்பல் துறைமுகம் உலகளவில் தலை சிறந்து விளங்குகிறது. மேலும், டாடா, தாபர், ஆக்ஸிஸ், அசோக் லேலெண்ட் உள்ளிட்ட 40,000 இந்திய நிறுவனங்கள் அங்கு செயல்படுகிறது. 3 மில்லயன் இந்தியர்கள் அரபு நாடுகளில் வசிக்கின்றனர். சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அபுதாபி தலைவரும் சந்தித்தது தொழில் வர்த்தகத்திற்கு அடித்தளமாக அமைந்தது. பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கலிபா துறைமுகம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு முழுமையான துறைமுகமாக செயல்பட்டு வருகிறது. 12 மில்லியன் பொது சரக்குகள் இந்த துறைமுகத்தில் கையாளப்படுகிறது.
பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அபுதாபியில் தலை சிறந்த விமான நிலையங்களும், உலக தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. வரும் 2020-ம் ஆண்டு அபுதாபியில் இருந்து மற்ற அரபு நாடுகளுக்குச் செல்ல புகைவண்டி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். தொழில் துறையினர் அபுதாபியுடன் வர்த்தக மேம்பாடு கொள்ள வேண்டும்." என்றார்.