தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை மீட்ட வனத்துறை

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒரு மாதமே ஆன யானைக் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

கோவை: கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒரு மாதமே ஆன யானைக் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். 



இன்று அதிகாலை 4.30 மணியளவில் தடாகம் அனுபாவி சுப்ரமணியர் கோவில் பகுதியில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் கொண்ட கூட்டம் வந்தது. அந்த யானை கூட்டத்தில் பிறந்து 1 மாதம் ஆன ஆண் யானை குட்டி ஒன்று இருந்தது. அப்போது, அந்த குட்டி யானை லலிதாம்பிகை கோவில் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டது. 

இது தொடர்பாக, வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர், தண்ணீர் தொட்டியை உடைத்து அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, குட்டி யானை அதன் தாயுடன் வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...