காத்திருப்போர் பட்டியலில் ரயில் பயணச்சீட்டை உறுதி செய்ய புதிய செயலி அறிமுகம்

ரயில் பயணங்களின் போது காத்திருக்கும் பயணியர் பட்டியலில் (RAC) பயணச்சீட்டை உறுதி செய்ய டிஜிட்டல் முறையிலான செயலி (ஆப்) காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை : ரயில் பயணங்களின் போது காத்திருக்கும் பயணியர் பட்டியலில் (RAC)  பயணச்சீட்டை உறுதி செய்ய டிஜிட்டல் முறையிலான செயலி (ஆப்) காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் பெரியய்யா முன்னிலையில் இந்த செயலி அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. 



"கோவை நுகர்வோர் இயக்கம்" என்ற அமைப்பு இந்த செயலியை உருவாக்கியுள்ளது. செயலியை உருவாக்கிய ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் இந்த செயலி இருந்தால், சார்ட்-க்கு பதிலாக இந்த செயலியை வைத்து ரயில் பெட்டியில் பயணம் செய்பவர்கள் எத்தனைப் பேர், அவர்களுடைய விபரத்தை எளிமையாக டிஜிட்டல் முறையில் பெறலாம். இந்த விபரத்தை அடிப்படையாக வைத்து அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள்ளோ, பயணிகள் பயணச்சீட்டை ரத்து செய்தாலோ, காத்திருக்கும் இருக்கைகளில் RAC பயணிகளுக்கு அவர்களுடைய வரிசைப்படி பெர்த் ஒதுக்கீடு செய்ய முடியும்.

மேலும், வயதுமுதிர்ந்த பயனாளிகளுக்கு இருக்கையைப் படுக்கையாக மாற்ற பரிசோதகர் கட்டணம் பெறுவதையும், டிஜிட்டல் முறையாக்குவதன் மூலம் லஞ்சம் போன்றவற்றை தடுக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செயலி விளக்கத்தின்போது கோவை நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர். உலக நுகர்வோர் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து இந்த செயலியின் விளக்கக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும், இந்த செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ரயில்வேயிடம் கோரியிருப்பதாகவும், இன்னும் 2 மாதத்திற்குள்ளாக நடைமுறைக்கு வரும் சாத்தியம் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...