குரங்கணி காட்டுத்தீ குறித்து விசாரிக்க அதுல்ய மிஸ்ரா நியமனம்

குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க அதுல்ய மிஸ்ராவை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி : குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க அதுல்ய மிஸ்ராவை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி வனப்பகுதி. இந்த மலைப்பகுதியில் கடந்த ஞாயிறு அன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில், சென்னையில் இருந்து சுற்றுலா சென்ற 11 பேர் காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அதுல்ய மிஸ்ராவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். காட்டுத்தீ ஏற்பட்டதற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...