நீலகிரி மாவட்டம் முதுமலையில் கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக காலில் காயங்களுடன் மக்னா யானை சுற்றி வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக காலில் காயங்களுடன் மக்னா யானை சுற்றி வருகிறது.

கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரியும் மக்னா யானை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒவேலி பகுதிக்கு வந்தது. அப்போது, அந்த யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதனால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக கிளன்வன்ஸ் பகுதியில் உள்ள பள்ளத்தில் நடக்க முடியாமல் நின்று வருகிறது. முன்னங்கால் இரண்டிலும் அதிக வீக்கம் உள்ளது. வன ஊழியர்கள் அந்த யானைக்கு வாழைத்தண்டு, வாழைப்பழம், தழைகளை கொடுத்து வருகின்றனர். இதனால், அந்த யானையின் உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யானைக்கு உணவு வழங்கும் வனத்துறையினர், அதற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 10 நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாமல் இருப்பதே சிகிச்சை அளிக்க தாமதமாவதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகின்றது. இந்த யானைக்கு கோவையில் இருந்து மருத்துவர்கள் வந்த பிறகே, சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. வனத்துறை தாமதிக்காமல் காயங்களுடன் தவித்து அந்த மக்னா யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரியும் மக்னா யானை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒவேலி பகுதிக்கு வந்தது. அப்போது, அந்த யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதனால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக கிளன்வன்ஸ் பகுதியில் உள்ள பள்ளத்தில் நடக்க முடியாமல் நின்று வருகிறது. முன்னங்கால் இரண்டிலும் அதிக வீக்கம் உள்ளது. வன ஊழியர்கள் அந்த யானைக்கு வாழைத்தண்டு, வாழைப்பழம், தழைகளை கொடுத்து வருகின்றனர். இதனால், அந்த யானையின் உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யானைக்கு உணவு வழங்கும் வனத்துறையினர், அதற்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 10 நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. முதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாமல் இருப்பதே சிகிச்சை அளிக்க தாமதமாவதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகின்றது. இந்த யானைக்கு கோவையில் இருந்து மருத்துவர்கள் வந்த பிறகே, சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. வனத்துறை தாமதிக்காமல் காயங்களுடன் தவித்து அந்த மக்னா யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.