மின்கம்பத்தை சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். 

ஆலாங்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பு இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் மிகவும் பழுதடைந்த நிலையில், இருந்த மூன்று மின் கம்பங்களையும் மாற்றக் கோரி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.



ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்போது, இன்னும் இரண்டு நாட்களில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நூறு குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...