கத்தியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டுகள சிறை

கத்தியை காட்டி பணம், நகை பறித்த வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: கத்தியை காட்டி பணம், நகை பறித்த வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதி அருகே நண்பனுடன் வந்துக் கொண்டிருந்த நிஜந்தன் என்பவரிடமிருந்து ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கத்தியை காட்டி கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நஞ்சன், ராஜேந்திரன், சூம்பி, முனியப்பன், விஜயன், குண்டு பாலன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...