ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: திருடன் என்று கூறி ஆதிவாசி இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர். கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கோத்தகிரியில் வீட்டுப் பொருட்களை வாங்கி முடித்து விட்டு பேருந்து நிலையம் சென்றார். அப்போது அங்கிருந்த பெண் மீது எதிர்பாராத விதமாக கை பட்டதாகத் தெரிகிறது.



இதை தவறாக எடுத்துக்கொண்ட அவர் திருடன், திருடன், என்று கூச்சலிடவே, அங்கு இருந்த போலீசார் முருகனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு சரமாரியாக முருகனைத் தாக்கியதாக தெரிகிறது. இரவு வரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட முருகன் இரவு சுமார் 9 .30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகன் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் சம்மந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில் எப்படி இவரை அடிக்கலாம்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் சரியான பதில் கூறாமல் முருகனை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து, முருகனின் உறவினர்கள் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். 

விசாரணை என்கிற பெயரில் முருகனைத் தாக்கிய காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முருகனை அழைத்து விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தை பற்றி காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறுகையில், "காவலர்களால் தாக்கப்பட்டார் என்பது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...