கோவையில் அனுமதியின்றி குழி தோண்டியதால் பி.எஸ்.என்.எல் கேபிள்கள் சேதம்

கோவையில் தனியார் குடியிருப்பு வாசிகள் அனுமதியின்றி குழி தோண்டியதால் சாலையில் பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன.

கோவை: கோவையில் தனியார் குடியிருப்பு வாசிகள் அனுமதியின்றி குழி தோண்டியதால் சாலையில் பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன. 

நஞ்சுண்டாபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கிருந்து கழிவுநீரை வெளியேற்றி, சுத்திகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லும் பொருட்டு கடந்த திங்கட்கிழமை சாலையில் குழி தோண்டப்பட்டது.

சாலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன. இதனால், நஞ்சுண்டாபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.



நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் சாலையில் குழி தோண்டப்பட்டதாகவும், இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், சேதமடைந்த கேபிள்களை சரிசெய்தனர். மேலும், அனுமதியின்றி குழி தோண்டியவர்கள் மீது புகாரளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...