கோவையில் தனியார் குடியிருப்பு வாசிகள் அனுமதியின்றி குழி தோண்டியதால் சாலையில் பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன.
கோவை: கோவையில் தனியார் குடியிருப்பு வாசிகள் அனுமதியின்றி குழி தோண்டியதால் சாலையில் பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன.
நஞ்சுண்டாபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கிருந்து கழிவுநீரை வெளியேற்றி, சுத்திகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லும் பொருட்டு கடந்த திங்கட்கிழமை சாலையில் குழி தோண்டப்பட்டது.
சாலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன. இதனால், நஞ்சுண்டாபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் சாலையில் குழி தோண்டப்பட்டதாகவும், இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், சேதமடைந்த கேபிள்களை சரிசெய்தனர். மேலும், அனுமதியின்றி குழி தோண்டியவர்கள் மீது புகாரளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

நஞ்சுண்டாபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கிருந்து கழிவுநீரை வெளியேற்றி, சுத்திகரிப்பு தொட்டிக்கு கொண்டு செல்லும் பொருட்டு கடந்த திங்கட்கிழமை சாலையில் குழி தோண்டப்பட்டது.
சாலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழில்நுட்ப கேபிள்கள் சேதமடைந்தன. இதனால், நஞ்சுண்டாபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் சாலையில் குழி தோண்டப்பட்டதாகவும், இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், சேதமடைந்த கேபிள்களை சரிசெய்தனர். மேலும், அனுமதியின்றி குழி தோண்டியவர்கள் மீது புகாரளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.
