அடுத்த 3 நாட்களுக்கு கோவையில் மழைக்கு வாய்ப்பு - வேளாண் பல்கலை.,

அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை கோவையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- 

இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கோவையிலும் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க் கிழமை கோவையின் பல பகுதிகளில் 11 மீ.மீ முதல் 20 மீ.மீ வரை மழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் வானம் மேகமூட்டத்துடனும் தூரல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 

இந்த மழையைப் பயன்படுத்தி அடுத்த அறுவடைக்கு விவசாயிகள் தயாராகலாம். மரங்களுக்கு பாத்தி கட்டுவதன் மூலம் 250 முதல் 300 லிட்டர் வரை நீர் கிடைக்கும். கொய்யா, தென்னை, சப்போட்டா மற்றும் மாம்பழம் போன்ற மரங்கள் பெரிதும் பயன்பெறும்.

வெப்ப நிலையைப் பொறுத்தவரை கோவையில் இரவு நேரங்களில் 22.5 டிகிரி செல்சியஸ் வரையும், பகல் நேரங்களில் 32 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாநகரப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...