கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கோவை : கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 83-க்குட்பட்ட இராஜ வீதியிலுள்ள திரு.கே.ஐ.எட்வினின் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 16,845ஐ செலுத்தாத காரணத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், வார்டு எண் 25-க்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 27,796 இதுவரை செலுத்தாத காரணத்தினால் இன்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 83-க்குட்பட்ட இராஜ வீதியிலுள்ள திரு.கே.ஐ.எட்வினின் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 16,845ஐ செலுத்தாத காரணத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், வார்டு எண் 25-க்குட்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைதாரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் மொத்தம் ரூ. 27,796 இதுவரை செலுத்தாத காரணத்தினால் இன்று குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.