தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
திருப்பூர் : தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
திருப்பூரில் மாவட்டம் உடுமலையில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை அறிமுக விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது இங்கு வழக்கமாகிவிட்டது. ஏனெனில், இந்தியாவில் மத வெறி கொண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர், பெரியார் குறித்து கல்வி நிலையங்களில் பாடங்கள் வராமல் தடுக்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதத்தை முக்கிய பாடமாக புகுத்தி வருகின்றனர். இந்தியா என்பதை விட இந்து மதம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை நுழைத்து பெரியார் மற்றும் அக்பேத்கர் கொள்கைகளை புறக்கணிக்கின்றனர்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் டவர் லைன் அமைக்கக் கூடாது." என்று அவர் பேசினார்.
திருப்பூரில் மாவட்டம் உடுமலையில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை அறிமுக விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது இங்கு வழக்கமாகிவிட்டது. ஏனெனில், இந்தியாவில் மத வெறி கொண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர், பெரியார் குறித்து கல்வி நிலையங்களில் பாடங்கள் வராமல் தடுக்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதத்தை முக்கிய பாடமாக புகுத்தி வருகின்றனர். இந்தியா என்பதை விட இந்து மதம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை நுழைத்து பெரியார் மற்றும் அக்பேத்கர் கொள்கைகளை புறக்கணிக்கின்றனர்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் டவர் லைன் அமைக்கக் கூடாது." என்று அவர் பேசினார்.