தொழில் பயிற்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள பழங்குடி மக்களுக்கு அழைப்பு

தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்ள தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி கருத்தரங்கு வரும் 14-ம் தேதி காலை 10.00 மணியளவில் அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் நிறுவன மையம், சிறப்பு பிரிவினரை ஊக்குவிக்கும் ஒரு அருமையான சுற்றுச்சூழலை உருவாக்கித் தருகிறது. 

இந்த மையத்தின் மூலம் சிறப்பு பிரிவினரின் தொழில் திறன் மேம்படுத்தப்பட்டு, பொது கொள்முதல் செயல்முறைகளில் திறம்பட பங்கேற்க உதவுகிறது. எனவே, இந்த பயிற்சி கூட்டரங்கில் கலந்து கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தொழில்களைத் துவங்கி, அரசு திட்டங்களின் வாயிலாக பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...