நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை : ரஜினி

இதுவரையில் நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறினார்.

இதுவரையில் நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறினார். 

ரஜினிகாந்த் முக்கிய விவகாரம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ரஜினிகாந்த் கருத்து கூறாமல் அமைதியாக இருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்தார். ரஜினிகாந்த் இப்போது இமயமலையில் பயணம் மேற்கொண்டு உள்ளார். டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இப்போது ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன். நான் ஒரு யாத்ரீகராக இங்கு வந்து உள்ளேன். இதில் அரசியல் பேசுவதற்கு எதுவும் கிடையாது. இப்போதுதான் அமிதாப்பச்சன் உடல்நிலைக்குறைவு தொடர்பாக தகவல் கிடைத்தது, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றார். 

அங்கு மீண்டும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. இப்போது, வரையில் நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை. என்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்கவில்லை,” எனக் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...