என்னையும் கமலஹாசனின் கட்சியில் சேர்த்துவிட்டனர் - தமிழிசை சவுந்திரராஜன்

மக்கள் நீதி மய்யத்தில் இணைக்க தனக்கும் மின்னஞ்சல் வந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மக்கள் நீதி மய்யத்தில் இணைக்க தனக்கும் மின்னஞ்சல் வந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க.வின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதாக நடிகர் கமலஹாசன் கிடைக்கும் மின்னஞ்சலுக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். அந்த கட்சியில் இருந்து எனக்கும் அழைப்பு மின்னஞ்சல் வந்தது வேடிக்கையாக உள்ளது. 

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது உண்மைதான். ஆனால், அதனை நடிகர்களால் நிரப்ப முடியாது. 22 மாநிலங்களில் ஆளுகின்ற பா.ஜ.க. மட்டுமே தமிழகத்தின் மாற்றாக அமைய முடியும். தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். திரைப்படத்துறை தற்போது முடங்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டு வர முடியாதவர்கள் எப்படி தமிழகத்தை மீட்கப் போகிறார்கள். 

தேனியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது. அதனையும் தமிழகத்தில் சில கட்சிகள் விமர்சிப்பது வேதனையளிக்கிறது. இலங்கையில் தமிழின மக்கள் கொல்லப்பட்ட போது வராத ராகுல்காந்தி தற்போது அரசியலுக்காக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக நாடகமாடுகின்றார்." என்று அவர் பேசினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...