குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் சிகிச்சை பலினின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில், ஆறு பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறிய பின்னர் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "3 பேருக்கு 40 சதவீதத்திற்கு குறைவான காயம் ஏற்பட்டது. 13 பேருக்கு 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 பேர் கொண்ட மருத்துவ குழு செயல்படுகிறது. 74 செவிலியர்கள் சிகிச்சை பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்," எனத் தெரிவித்தார். இந்நிலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களைக் கண்காணிக்க தவறியதாக வனவர் ஜெய்சிங் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடேயே, மதுரைக்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...